எனது எண்ணங்கள் ...

Photobucket



நீ நினைப்பதெல்லாம்
நடக்கிறதென்றால் ...
புரிந்துகொள் ..
நீ தவறான வழியில் செல்கிறாய் ...

* * * * *

மனதில் பதிந்தவை
அனைத்தும் நினைவில் இருக்கும் ...
ஆனால் பலருக்கு
மனதில் எதுவுமே பதிவதில்லை ...

* * * * *

புன்னகையை கைவிடாதே ...
சொல்ல முடியாத சூழ்நிலைகளில்
ஒரு புன்னைகை

எளிதாக பேசிவிடும் ...

* * * * *

ஆசைகள் எளிதாக கிடைக்கும்
சேர்க்காதே ...
அதிகம் சேர்ந்துவிட்டால்
செலவழிப்பது கடினம் ...
உன்னையே அழித்துவிடும் ...

* * * * *

சூடான கண்ணாடியும்
குளிர்ந்த கண்ணாடியும்
பார்வைக்கு ஒன்றே
தொட்டால் மட்டுமே உணரமுடியும் ...

* * * * *

வெற்றியின் பாதை
உனது தேடல்களில் மட்டுமே ...
தேடல்களை தேங்க விடாதே
முற்றுபுள்ளியாய்...
தங்கிவிடுவாய் ஓரிடத்தில் ...

* * * * *



எனது எழுத்தோவியங்களை
மேலே உள்ள பக்கங்களில் பார்க்கலாம்...
மறக்காமல் உங்கள் கருத்துக்களை
தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன் ..
என்னையும் என் எழுத்துக்களையும்
செதுக்கிட அது
உதவியாக இருக்கும் ...


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு...

22 comments:

Subash said...

ஆஹா. அருமையான கவிதைத்தெகுப்பு.
வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களிற்குப்பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி விஷ்னு.

Vishnu... said...

// Subash said...
ஆஹா. அருமையான கவிதைத்தெகுப்பு.
வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களிற்குப்பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி விஷ்னு.//

மிக்க நன்றிகள் நண்பரே ..நலமா ?..

கொஞ்சம் இடைவெளி அதிகமாகி விட்டது .. இனி தொடர்ந்து எழுதுகிறேன் நண்பரே .. நானும் உங்களை சந்திக்க வந்துகொண்டு இருக்கிறேன் உங்கள் வலை பூ நோக்கி ..

அன்புடன்
விஷ்ணு

Tamilparks said...

அருமை வாழ்த்துக்கள்

Unknown said...

அழகான கவிதைகள்
அனைத்தும் காதலி கொடுத்து வைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள்...........

Unknown said...

அழகான கவிதைகள்
அனைத்தும் காதலி கொடுத்து வைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள்...........

Unknown said...

அழகான கவிதைகள்
அனைத்தும் காதலி கொடுத்து வைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள்...........

Unknown said...

அழகான கவிதைகள்
அனைத்தும் காதலி கொடுத்து வைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள்...........

Unknown said...

அழகான கவிதைகள்
அனைத்தும் காதலி கொடுத்து வைத்தவர். தொடர்ந்து எழுதுங்கள்...........

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பின் விஷ்ணு
வணக்கங்களுடன் உங்கள் இளங்கோவன் சென்னை.

நலம் நலமறிய ஆவல்...

தங்களின் தொடர்பு இல்லாமையால் மிகவும் வருத்தத்துடன்..உங்களின் வலைத்தளத்தில் தவழ்கின்றேன்..

வாழ்த்துக்கள்.
அன்புடன் இளங்கோவன்

vaanmugil said...

நல்லா இருக்கு நண்பரே!

vetha (kovaikkavi) said...

ஓ! எண்ணங்கள் மிகச் சிறப்பாக , யதார்த்தமாக உள்ளது சகோதரரே. நேரம் கிடைக்கும் போது பார்த்து எழுதுகிறேன். தொடருங்கள் வாழ்த்துடன் டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.

vetha. said...

ஓ! எண்ணங்கள் மிகச் சிறப்பாக , யதார்த்தமாக உள்ளது சகோதரரே. நேரம் கிடைக்கும் போது பார்த்து எழுதுகிறேன். தொடருங்கள் வாழ்த்துடன் டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.

கார்த்திகேயன் said...

அருமையான கவிதைகள்,மிகவும் யதார்த்தமாய் இருக்கு.என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றென்றும் உங்களோடே பயணிக்கும்.அதே உயிரோட்டத்தில் இருவரும் ஒன்றியிருப்போம்.நன்றி...:)

சுபாவள்ளி said...

இனிமையான தொகுப்புகள் வாழ்த்துக்கள் விஷ்ணு.... இன்னும் ரசித்திட கவிதைகளை தாருங்கள்

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

அன்பு நண்பரே.

கவிதை அனைத்தும் மனதை கொள்ளைகொள்கிறது, எளிமையான எழுத்துநடையில் சூப்பராக எழுதி உள்ளீர்கள்.


வாழ்த்துக்கள் நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/08/5.html

துரை செல்வராஜூ said...

தங்களுடைய தளத்திற்கு முதல் முறையாக வருகின்றேன். தென்றலாய் வருடும் வரிகள்!..சொல்ல ஓர் வார்த்தையில்லை!.. விழியின் ஓரத்தில் நீர்த்துளிகள்!.. வாழ்க!.. வளர்க!..